ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி நேற்று (27) குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளின் போது, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், நீதிமன்றில் விரிவான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை இன்று மீளப்பெறுமாறு உத்தரவிட்டதுடன், மனு மீதான விசாரணைக்கான நிலையான திகதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.