சுமார் 5000 ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 110 மில்லியன்.
79 வயதுடைய ஸ்பெயின் விவசாய பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் டோஹா ஊடாக கடந்த 22ஆம் திகதி நாட்டிற்கு வந்துள்ளதாகவும் சுங்க பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது பையை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போதிலும், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லாததால் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், தாமதமாக வந்த அவரது மற்றொரு பையை பரிசோதித்தபோது, இரண்டு கோப்புகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேக நபர் உரிய பொருட்களை எடுத்துச் சென்ற போது கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கொக்கேயின் எடை 2 கிலோகிராம் 198 கிராம் எனவும், அதன் மொத்த பெறுமதி 109.9 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.