கட்டுநாயக்க, தவமொட்டாவ பிரதேசத்தில் நேற்று (15) பிற்பகல் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான இந்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸாரால் துரத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகும் போது, சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது சுறுசுறுப்பாக செயல்பட்ட சந்தேக நபர், தன்னுடன் இருந்த அதிகாரியின் சர்வீஸ் துப்பாக்கியை பறித்து, அதிகாரியை சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதால், கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்