நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் கொல்லப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்த 21 கைதிகளுடன் மொத்த பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
மோதலில் காயமடைந்த ஏனைய சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகள் குழு கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்