ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல்களால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, புதிய மோதல்கள் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 9% வரை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 84.67 டாலராகவும், மர்பன் கச்சா எண்ணெய் பேரல் 80.52 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.58 டாலராகவும் பதிவாகியுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்