வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (02) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சற்று நேரத்திற்கு முன்னர் அலுவலகத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் அவர் கொண்டிருந்ததாக கூறப்படும் பல உறவுகள் தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்