நாங்களும் கடுமையான பேச்சுக்கு தயார்; நெல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாது - தேசிய விவசாய சங்கம் நாங்களும் கடுமையான பேச்சுக்கு தயார்; நெல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாது - தேசிய விவசாய சங்கம் - Theevukaran News நாங்களும் கடுமையான பேச்சுக்கு தயார்; நெல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாது - தேசிய விவசாய சங்கம் நாங்களும் கடுமையான பேச்சுக்கு தயார்; நெல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாது - தேசிய விவசாய சங்கம்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நாங்களும் கடுமையான பேச்சுக்கு தயார்; நெல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாது - தேசிய விவசாய சங்கம்

Adjust the font size:     

வரலாற்றில் ஒரு வர்த்தக அமைச்சரோ அல்லது கூட்டுறவு அமைச்சரோ நெல் விலையை நிர்ணயம் செய்து அறிவித்ததில்லை என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன், நெல்லுக்கான உறுதியான நியாயமான விலையை கோரி தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக விளைநிலங்களில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், அரசாங்கம் அறிவித்த விலைக்கு இணங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நெல் விலை நிர்ணயம் செய்யும் போது நுகர்வோரை மாத்திரம் சிந்திக்க வலியுறுத்தும் அரசாங்கம் எரிபொருள் விலைகள், உணவுப் பொருட்கள் மற்றும் மின் கட்டணங்களை அதிகரிக்கும் போது நுகர்வோரை கருத்தில் கொள்ளத் தவறுவது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) இணைந்துள்ள விவசாய அமைப்புகளை விலை நிர்ணயம் செய்ய அழைப்பது சரியானதா என்பது பிரச்சினைக்குரியது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மாறாக நெல்லின் விலையை சமூக பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விவசாய சமூகமும் அரசாங்கத்துடன் "கடினமான பேச்சுக்களை" மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், அனைத்து விவசாய அமைப்புகளுடன் இணைந்து தேசிய கூட்டு விவசாயக் கூட்டமைப்புகளும் வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்கத் தயார் எனவும் தேசிய விவசாய சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post