நொறுங்கிப்போன எதிர்க்கட்சியினர் சிறு விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டங்களை நடத்துவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இவ்வாறான எதிர்ப்புக்கள் இருந்த போதிலும், நாட்டின் விவசாய மக்களுக்கு அரசாங்கம் வழங்கக்கூடிய அதிகபட்ச நிவாரணங்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
விவசாயிகள் திருப்தியடைவதாக மேலும் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, தனியார் துறையினரும் தற்போது நெல் விலையை அதிகரித்துள்ளதாகவும், அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் உறுதியளித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்