தற்போதைக்கு அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உடனடி தேவையோ அல்லது அவசரமோ இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் எம்.பி., எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் போராடுவதை விட, அரசாங்கமே வெள்ளித் தட்டில் வைத்து எதிர்க்கட்சிக்கு ஆட்சியைக் கையளிக்கும் நிலை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அவரைச் சூழ்ந்துள்ள நபர்கள் பொதுமக்களை அந்நியப்படுத்தும் வகையிலும் நிர்வாகத்தை சோர்வடையச் செய்யும் வகையிலும் செயற்பட்டு அறிக்கைகளை வெளியிடுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்