கிரிக்கெட் வாரிய தேர்தலை விரைந்து நடத்த வேண்டும்; அதுவரை, உறுப்பினர் கூட்டங்களில் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் - ஐசிசி

Adjust the font size:     

இலங்கை கிரிக்கெட் (SLC) நிர்வாகத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அதன் உறுப்பினர் கூட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் நடத்தப்படும் வரை, ஐ.சி.சி உறுப்பினர் கூட்டங்களில் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக இழக்க நேரிடும் என சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக கடமையாற்றிய ஷம்மி சில்வா பதவி விலகியதையடுத்து, கிரிக்கட் நிர்வாகத்தை நிர்வகிப்பதற்காக நிலைமாறு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஐசிசி உறுப்பினர் கூட்டத்தின் போது இலங்கை கிரிக்கெட்டின் நிலை குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் திருத்தப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதில் SLC அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேலும் குறிப்பிட்டது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post