உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்கும் தீர்மானம் எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிக்கப்படும்

Adjust the font size:     

நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post