தற்போதைய அரசாங்கத்தை கைவிட்டு நாமல் ராஜபக்ச தலைமையிலான புதிய நிர்வாகத்தை 2029 அல்லது அதற்கு முன்னதாக உருவாக்குவதற்கான நேரம் வந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்து கவனிப்பதில் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்த அவர், அதனுடன் தொடர்ந்து இருப்பதற்கும், அதை ஆதரிப்பதற்கும் அல்லது அதற்கு மதிப்பளிப்பதற்கும் எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.
2029 இல் அல்லது அதற்கு முன்னர் இந்த நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பாக நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கும் நாள் தவிர்க்க முடியாமல் உதயமாகும் என்றும் முன்னாள் எம்.பி மேலும் வலியுறுத்தினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்