பொது நிதி மற்றும் அரச சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களில் நாட்டின் பொது பிரதிநிதிகள் எவ்வாறு வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டார்கள் என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் தமது சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் அல்லது நெருங்கிய சகாக்களின் வாகனங்களை தமது பயணத்திற்காக பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்