கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன எனப்படும் "மதியா" கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் மலேசியாவில் இருந்த போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், நேற்று (25) இரவு இலங்கை வந்த போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தடுப்புக் காவலில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மேவை சுடும் நபராக அவர் செயல்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபரை 72 மணித்தியால விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்