மடு ஆற்றில் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இருவர் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதன்படி நேற்று (25) காலை அம்பலாங்கொடை வத்துகெதர பிரதேசத்தின் மடு ஆற்றுப் பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் வத்துகெதர பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொட பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்