தெல்தெனிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேகநபர் - இறந்த பெண்ணின் காதலன் - திருமணமான மனைவியுடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து நேற்று (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்