சுரேஷ் சாலி தொடர்பில் இரண்டு சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கிடையில் நேற்று (24) இடம்பெற்ற வாக்குவாதம் கட்சியின் அனுசரணையிலோ அல்லது கட்சியின் கொள்கைகளினாலோ நடத்தப்படவில்லை எனவும், அது தொடர்பில் தனக்கு விழிப்புணர்வு இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (24) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர், இவ்வாறான விவாதத்தின் மூலம் தேசிய ரீதியிலான தீர்மானத்தை எட்ட முடியாது என குறிப்பிட்டார்.
வெறும் விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சட்ட விவகாரம் இங்கு உள்ளதாகத் தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவை விட ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் சுரேஷ் சாலி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் எவ்வித ஆதாரமும் இன்றி அல்லது நீதிமன்றில் சாட்சியங்களை முன்வைக்காமலும் அவரைக் கைது செய்தமை தவறானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்ததுடன், சமூக ஊடக ஆர்வலர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதத்தால் இவ்வாறான தவறான செயலை தீர்மானிக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்