சொத்துக்கள் மற்றும் கடன் பத்திரங்களை சமர்ப்பிக்க அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (30) முடிவடைவதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9-ம் எண் ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி, சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும் ஆன்லைனில் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினத்தின் பின்னர் சொத்து மற்றும் பொறுப்புப் பத்திரங்களை சமர்ப்பிக்காத அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்