2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ஹர்ஷ டி சில்வா 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ஹர்ஷ டி சில்வா - Theevukaran News 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ஹர்ஷ டி சில்வா 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ஹர்ஷ டி சில்வா
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - ஹர்ஷ டி சில்வா

Adjust the font size:     

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சமர்ப்பிப்புகளின் அடிப்படையில் தாம் ஏற்கனவே தனது அறிக்கையை தயாரித்துள்ளதாக எம்.பி.

நிதிக்குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த அறிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கையை வாசித்து தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த கருத்துக்கள் கிடைத்த பின்னர் அது தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post