ஜூலை முதலாம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி வருடாந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் கட்டண திருத்தத்தை கருத்திற்கொண்டு பஸ் கட்டண அதிகரிப்பு சதவீதம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ.சந்திரபால மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்