இலவசமாக 52 மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகள்

Adjust the font size:     


அக்கரைப்பற்று மாநகர ஆணையாளரின் வேண்டுகோளின் பேரில் Helanka நிறுவனத்தினால் CSR (Corporate Social Responsibility) திட்டத்தின் கீழ் சுமார் 52 மாணவர்களுக்கான பாடசாலை பாதணிகள் இலவசமாக கடந்த 09.08.2023 ஆம் திகதி அக்கரைப்பற்று மாநகர ஹல்லாஜ் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ATM. றாபி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் Helanka நிறுவன பிரதிநிதி ஸ்டீபன் அன்டன், அக்கரைப்பற்று பதுர் பாடசாலை அதிபர் நாஸர், சமூக செயற்பாட்டாளர்களான ஆசிரியர் ரியாத் முகைதீன், முசாதிக் - EDO, மாநகர சபை பிரதம முகாமை உத்தியோகத்தர் சலீத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரிஸ், மாநகர சபை அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post