நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டுக்கான நெல் கொள்வனவு நடவடிக்கையின் கீழ் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) சமன் பாலித பண்டார தெரிவித்தார்.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிகளவு நெல் அறுவடைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெல் 3,148 மெற்றிக் தொன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 567 மெற்றிக்தொன் நெல் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இருந்து 620 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் நெல் அளவுக்கேற்ப நெல் களஞ்சியசாலைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நெல் அறுவடைகளை கொள்வனவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் 148 களஞ்சியசாலைகளை திறக்க நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளதாகவும் சமன் பாலித பண்டார மேலும் தெரிவித்தார்.