ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பலத்தை ஒவ்வொரு கிராமத்திலும் தொகுதியிலும் மீளக் கட்டியெழுப்ப நாமல் ராஜபக்சவின் அரசியல் தலைமைத்துவம் வெற்றியளித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் எம்.பி., நாமல் ராஜபக்ச இன்று நாடு முழுவதும் கவர்ச்சிகரமான வருங்கால ஜனாதிபதி வேட்பாளராக உருவெடுத்துள்ளதாகவும், அவர் தன்னை நடத்தும் பக்குவமான முறையை அனைவரும் அங்கீகரிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்று காணப்படுகின்ற நாமல் ராஜபக்ச, அன்று இருந்த அதே நபர் எனவும், ஆனால் சமூகத்திற்கு முற்றிலும் மாற்றப்பட்ட ஒரு நபரை முன்னிறுத்துவதற்காக அவர் மீது வேறு ஒரு திரை இழுக்கப்பட்டு, அதன் மூலம் உண்மையான நாமலைப் பொதுமக்கள் பார்க்க முடியாதவாறு தடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் லம்போகினிகள் மற்றும் பந்தயங்கள் பற்றி இட்டுக்கட்டப்பட்ட கதைகள், நாமல் ராஜபக்சவின் உண்மையான உருவத்தை சமூகம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், தடுப்பதற்கும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்டவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்துள்ளார்.