தென் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை தொடர்பில் இன்று (22) நடைபெறவிருந்த தரம் 09 புவியியல் மற்றும் குடிமையியல் வினாத்தாள்களை வெளியிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாலும், உரிய வினாத்தாள் இது வரையில் பிரதேச அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படாததாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று நடைபெறவிருந்த பாடம் எதிர்வரும் ஜூலை மாதம் 24ஆம் திகதி நடைபெறும் எனவும், இது தொடர்பில் பிரதேசத்திலுள்ள அனைத்து அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தென் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#connection
#delay
#informed
#grade
#education
#region
#offices
#divisional
#until
#relevant
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News