டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்புகளை மீளமைப்பதில் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்' ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு 5வது தடவையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அதன் தலைவர் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலில தலைமையில் கூடியது.
திட்வா சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் கல்வி, சுகாதாரம், கலாசார உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் முன்னேற்றம் காணப்படுவதைக் கண்காணித்து பிரதான குழுவிற்கு அறிக்கையிடுவதற்கு இந்த உபகுழு பொறுப்பேற்றுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே சுட்டிக்காட்டினார். எனவே, தற்போதுள்ள பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கும், தேவைப்படும்போது கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் தேவையான தகவல்களை கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்குவது இந்த துணைக்குழுவின் பொறுப்பாகும்.
அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மாகாணங்களின் உட்கட்டமைப்புகளை மீளமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாகாண பிரதம செயலாளர்களினால் முன்வைக்கப்பட்டதுடன், பொது வசதிகளை மீளமைப்பதற்கான முன்னேற்றம் குறித்து உள்ளூராட்சி ஆணையாளர்களினால் ஆன்லைன் முறைமை மூலம் முன்வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.