சிறைச்சாலை அமைப்பின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கலந்துரையாடலின் போது அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் யோசனைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துவது குறித்தும், அதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.