பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 'பிள்ளையான்' எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இணையவழி முறையின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்லடி முருகன் கோவிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவரை சுட்டுக் கொன்றது, அந்த ஆண்டு மே 22 ஆம் தேதி இருவரை சுட்டுக் கொன்றது மற்றும் அந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி வவுனியாவில் ஆயுதக் குழுவினால் ஒருவரை சுட்டுக் கொன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.