நாட்டின் நீதித்துறையை தனது அரசியல் ஆயுதமாக பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கம் ஏற்கனவே பொலிஸாரை தனது அரசியல் கருவியாக மாற்றிவிட்டதாகவும், தற்போது நீதித்துறையை அரசியல் கைக்கூலியாக மாற்ற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்திலும் தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்புத் திருத்தங்கள் - பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமை தொடர்பான விதிகள் மற்றும் வேட்பாளர்களை மூன்று முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதித்தல் போன்ற சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன - ஆனால் பொதுமக்கள் அவற்றை நிராகரித்தனர்.
எந்தவொரு விசாரணையையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.