நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது

Adjust the font size:     

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த தீர்மானத்திற்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் தனது பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றத் தவறியதைக் காரணம் காட்டி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

#nanayakkara #prison #opposition #votes #against #responsibility #inmates #fulfill #resolution #officers
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post