கொலை முயற்சி மற்றும் மிரட்டல் மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்தமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்கந்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் நேற்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிசல அரண மயானத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை துப்பாக்கியால் அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உரிய விசாரணைகளின் போது கிடைத்த தகவலின்படி, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படும் அத்திடிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.