கடந்த காலங்களில் சிறிகொத்த மற்றும் டார்லி வீதியில் இருந்தே நாட்டை ஆட்சி செய்ததாகவும், அப்போது அது தொடர்பில் எவருக்கும் பிரச்சினை இருந்ததில்லை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், தேர்தலின் மூலம் அரசியல் கட்சிக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும், அதன் பின்னரே அந்த அதிகாரம் அரசாங்கத்திற்கு மாறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) ஆகிய இரு கட்சிகளின் தலைமையகம் பெலவத்தையில் அமைந்துள்ளதால் தற்போதைய நிர்வாகத்தின் அதிகாரம் பெலவத்தையிடம் உள்ளது என்று அவர் கூறினார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்ததாவது, சகலமும் அந்த இடத்தில் இருந்து திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்டது என்றும், பெலவத்தையில் இருந்து தான், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் தலைமுடியை உதிர்க்கும் அளவுக்கு அரசியல் களம் மாற்றமடைந்தது என்றும் நகைச்சுவையாக கூறினார்.