தமக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வருவதால் எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான அச்சத்தை கொண்டிருக்கவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தந்தை மாமாக்களை தலைமறைவாக இருந்து வெளியில் வருமாறும், நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளுமாறும், நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
யார் வேண்டுமானாலும் 'ஜனாதிபதி கனவுகளில்' ஈடுபடலாம், ஆனால் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை கருத்தில் கொண்டு, அவர் எங்கு ஜனாதிபதியாக வருவார் என்று நினைக்கிறார் என்று ஒருவர் கேள்வி எழுப்ப வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனிநபர்கள் ஜனாதிபதியா அல்லது அவர்களின் மகன்களா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படாமல், பாரபட்சமின்றி தற்போது சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மேலும் வலியுறுத்தினார்.