தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (23) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எம்.பி., தான் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் கூட வரவில்லை என குறிப்பிட்டார்.
தாம் தொழில் ரீதியாக வைத்தியர் என குறிப்பிட்ட அவர், தனக்கு பாராளுமன்றத்தில் சம்பளம் வாங்க வேண்டிய அவசியமில்லை எனவும், இலங்கையில் அல்லது வெளிநாட்டில் மருத்துவராக கடமையாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
தமக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவ்வாறு தெரிவித்தால் தமக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்தவரை தோற்கடிப்பதாக தெரிவித்தார்.