இந்த ஆண்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா திருவிழா 2026 இன் நிறுவன ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெர விழாவை பிரமாண்டமாகவும், கௌரவமாகவும் நடாத்துவதற்கு அரச தலையீடு மற்றும் ஆதரவு தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரஹெரா விழாவின் வெற்றிக்கு அனைத்து அரச நிறுவனங்களும் வழங்கிய பங்களிப்புகள் மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நிதி அனுசரணைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பெரஹராவைக் காண வரும் பக்தர்களுக்குத் தேவையான நீர், மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து ஏற்பாடுகள், யானைகளை ஊர்வலத்திற்குப் பாதுகாப்பது உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.