சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில், கௌரவ டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அவர்கள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இவ்வருட உலக AI மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் கடந்த 17-ம் தேதி தொடங்கிய மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அவர், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளிடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பிராந்திய வளர்ச்சிக்கு AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பை அதிகரிக்கவும் சீனா செயல்படும் என்றார்.
மாநாட்டின் முக்கிய உரைகளைத் தொடர்ந்து, நாட்டின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்ற பல சிறப்பு கலந்துரையாடல் சுற்றுகள் நடத்தப்பட்டன. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க ஆகியோர் மாநாட்டில் பங்குபற்றிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டிஜிட்டல் அமைச்சர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைத் தலைவர்கள் பலரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
பிராந்திய மட்டத்தில் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அறிவு பரிமாற்றம் தொடர்பாக விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.