மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முழு உலகத்தையும் பாதிக்கும் ஒரு சூழ்நிலை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் எம்.பி., எரிபொருட்களின் விலை 20 முதல் 25 ரூபாவால் குறைக்கப்பட்டதன் மூலம் உலகளாவிய எண்ணெய் விலை வீழ்ச்சியின் நன்மையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய போதிலும், இந்தக் குறைப்பு போதுமானதாக இல்லை என்பதே பொது மக்களின் கருத்தாக உள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து "இலங்கையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை மேலும் குறைக்கப்படலாம்" என்று ஒருவர் கூறுவது உண்மையாக இருக்கலாம், மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் செலவினங்களை ஈடுகட்டுவதற்கும், அரச நிறுவனங்கள் சுமந்துகொண்டிருக்கும் பாரிய கடன் சுமையை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் வருவாயை உருவாக்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.
குறிப்பாக இலங்கை சிறிய பொருளாதாரத்திற்குள் செயற்படுவதால், இந்த நிதி உண்மைகளை புறக்கணித்து அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சிப்பது நியாயமற்றது என முன்னாள் எம்.பி மேலும் வலியுறுத்தினார்.
கூட்டு எதிரணிக்கு சரியான கொள்கை கட்டமைப்பு இல்லையென வலியுறுத்தி, கூட்டு எதிரணியுடன் தாம் இணையவில்லை என்று கூறி முடித்தார் வாசுதேவ நாணயக்கார.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்