தற்போதைய டெங்கு நோய்த் தொற்று நிலைமை தொடர்பில் பொதுமக்கள் உரிய அவதானம் செலுத்தாவிடின் பாரிய நிலைமை ஏற்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அமித் குமார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வைத்தியசாலைகளை விட மயானங்களை விட்டு மக்கள் பலர் திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், இவ்விடயத்தில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதற்கு அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஒரு தொற்றுநோய் தாக்கும்போது, மக்கள் எப்பொழுதும் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது பிற கட்சிகளிடமிருந்தோ தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த கடமைகளை புறக்கணிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
சுகாதார அதிகாரிகளின் வருகைக்காக பொதுமக்கள் காத்திருக்காமல், பொறுப்புள்ள குடிமக்கள் என்ற ரீதியில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு கிராமமாகவும் பொது அமைப்பாகவும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அமித் குமார மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்