கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில் வீதியில் வசிக்கும் நபர் ஒருவரை சுட்டுக் கொல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (21) இரவு 10.30 மணியளவில் குறித்த நபர் வீட்டில் மாடியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்கள் இருவர் அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அவர்கள் சுட முற்பட்டதாகவும், எனினும் அப்போது துப்பாக்கி ஏந்தவில்லை எனவும், வீட்டினுள் நுழைந்த ஆயுததாரிகள் குறித்த நபரை உதைத்து தாக்கியதாகவும், அதன் பின்னர் அவர் பயந்து ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்தமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.