"சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற தொனிப்பொருளின் கீழ் அந்தஸ்து எதுவாக இருந்தாலும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் எழுப்பும் பொய்யான அறிக்கைகள் அல்லது சவால்களுக்கு தாம் அஞ்சப்போவதில்லை என குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளை மீளப்பெறப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் வர்த்தகம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான உறவுகள் - பல தசாப்தங்களாக அரசியல் ஆசீர்வாதங்களுடன் செழித்தோங்கியிருந்த உறவுகள் - இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான "ரதம ஏகத" தேசிய நடவடிக்கை, தேசிய சபை, மாவட்ட சபைகள், பிரதேச செயலக அடிப்படையிலான குழுக்கள் மற்றும் 14,125 பொது பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்து, பொதுமக்களுடன் இணைந்து பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.
போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்து சிறையில் அடைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் கவனம் செலுத்தி அவர்களை நோயாளிகளாக கருதி புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைக்கு வழிகாட்டுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.