முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதவான் சத்துர திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்று (21) நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரான முன்னாள் அமைச்சரின் நான்கு உத்தரவாததாரர்களையும் கடுமையாக எச்சரித்த மாத்தறை பிரதான நீதவான், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அல்லது அவர்களின் பிணைப் பத்திரங்களை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்பதற்கான காரணத்தை முன்வைக்குமாறும் கடுமையாக அறிவுறுத்தினார்.
மாத்தறை, எலியகந்த வீதியில் பிரவுன்ஸ் ஹில் பகுதியில் 1.5 ஏக்கர் தென்னந்தோப்பு காணியை 2000 ரூபாவிற்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (21) அழைக்கப்பட்டது.