வரம்பற்ற பொய்யான கூற்றுக்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இன்று அந்த ஆரம்ப பொய்களை நியாயப்படுத்த இன்னும் கூடுதலான பொய்களை கூற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய எம்.பி., தற்போதைய அரசாங்கத்தின் பிரகாரம் ஒவ்வொரு தொழிலதிபரும் ஒரு 'திருடன்' என்றும், அவர்கள் கிட்டத்தட்ட தினமும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படுவதாகவும் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் என அனைவரும் ஒரே மாதிரியாகவே நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அரசாங்கம் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
தற்காலத்தில் தற்கொலைகள் அடிக்கடி பதிவாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதுடன், அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையின்படி யாராவது ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டால் அதற்கு பின்னால் ராஜபக்ஷக்கள் இருப்பதாக நிர்வாகம் கூறுவதாகவும் கூறினார்.