கொம்பன்ன வீடிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விதனகே வீதி பகுதியில் ஐஸ் உடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்தியப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
வீடொன்றில் இருந்து 728 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வீட்டின் உரிமையாளரான கொழும்பு 02 இல் வசிக்கும் 81 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் மகன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொம்பன்யவீதிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்