யோஷித மற்றும் டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

Adjust the font size:     

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி விசாரணைக்கு முந்திய மாநாட்டிற்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post