11 மாவட்டங்களில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம்

Adjust the font size:     

இன்று (16) முதல் 11 மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 11 மாவட்டங்களில் உள்ள 63 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

இதேவேளை, நாளாந்த நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் நுளம்புக் கடியை குறைப்பதற்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் புகைப் புகைத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post