தெல்தெனிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, பிரதான சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் முன்னர் அனுமதி வழங்கியிருந்தது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்