பொசன் போயா தினத்தன்று நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (29) குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 இளைஞர்கள் குழுவொன்று 15 மோட்டார் சைக்கிள்களில் நோர்டன் பிரிட்ஜ் ஊடாக கார்ட்மோர், முர்ரே, லக்சபான மற்றும் அபேர்டீன் ஆகிய நீர்வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்ட போது மூன்று இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பின்னர், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை விரட்டிச் சென்று சோதனையிட்டபோது, மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17-21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் இன்று (30) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்