கொழும்பு பேருந்துப் போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் 'பசுமை நகரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி திட்டத்தின்' (GCIEP) கீழ் நிறைவு செய்யப்பட்ட திட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கையின் UNDP பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான வரைபடத்தை உள்ளடக்கிய இந்த வேலைத்திட்டத்தின் முடிவுகளை பிரதி உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ'மஹோனி உத்தியோகபூர்வமாக முன்வைத்தார்.
இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, மேலும் நிலையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற நகர போக்குவரத்து முறையை கட்டியெழுப்புவதற்கு இந்த வேலைத்திட்டம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்