பொசன் பௌர்ணமியை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்கு செல்லும் பக்தர்களுக்காக பல விசேட புகையிரதங்களைச் சேர்க்க இலங்கை ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இந்த ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அனுராதபுரம், பெலியத்தவிலிருந்து அனுராதபுரம், பொல்கஹவெலயிலிருந்து அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பில் இருந்து அனுராதபுரம் வரை ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தொடர்புடைய அட்டவணை கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்