நீதிமன்றத்தை அவமதித்ததாக சில நபர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக சமகி ஜன பலவேகய (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், முடியுமானால் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு சவால் விடுப்பதாக தெரிவித்தார்.
நீதித்துறை தொடர்பாக தாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும், போலி செய்திகளை உருவாக்கவும், பொதுமக்களின் கருத்தை கையாளவும், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி தனக்கு எதிராக சட்ட அல்லது சட்டவிரோத நடவடிக்கை எடுக்கவும் டிஜிட்டல் பயங்கரவாதிகளை பயன்படுத்த முயற்சி நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
"டிஜிட்டல் பயங்கரவாதிகளும்" நீதித்துறைக்கு வெளியே உள்ளவர்களும் நீதிமன்றத்தை அவமதித்ததாக தீர்ப்பு வழங்கத் தொடங்கியுள்ளனர் என்றும், அவமதிப்புச் செயல் நடந்ததா என்பதை நீதிமன்றத்திற்குள்தான் தீர்மானிக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன மேலும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்