அம்பாறை டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்ஸினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பஸ் சேதமடைந்துள்ளதுடன், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்